வடகிழக்கு மாநிலங்களில் மீண்டும் நிலநடுக்கம்

வடகிழக்கு மாநிலங்களில் மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டது.

Update: 2019-07-20 19:30 GMT
இடாநகர்,

வடகிழக்கு மாநிலங்களான அருணாசலபிரதேசம் மற்றும் அசாமில் நேற்று அதிகாலை 4.24 மணிக்கு லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 5.5 புள்ளிகளாக பதிவான இந்த நிலநடுக்கம் சில நிமிடங்கள் நீடித்தது.

ஏற்கனவே நேற்றுமுன்தினம் அந்த மாநிலங்களில் 30 நிமிடங்களில் அடுத்தடுத்து 3 முறை நிலம் நடுக்கம் கண்டது. இந்தநிலையில் நேற்றும் நிலநடுக்கம் ஏற்பட்டதால் மக்கள் அதிர்ச்சியில் உறைந்தனர்.

மேலும் செய்திகள்