கர்நாடகாவில் தற்போதைய சூழலில் யாராலும் நிலையான ஆட்சி தர முடியாது : குமாரசாமி

தற்போதைய சூழலில் யாராலும் நிலையான ஆட்சி தர முடியாது என்று குமாரசாமி தெரிவித்துள்ளார்.

Update: 2019-07-25 09:27 GMT
பெங்களூரு,

கர்நாடக அரசு மீதான நம்பிக்கை தீர்மானம் தோல்வி அடைந்ததை அடுத்து குமாரசாமி அரசு கவிழ்ந்தது. இதையடுத்து பா.ஜனதா தலைவர்கள் மிகுந்த  மகிழ்ச்சியில் உள்ளனர்.  மீண்டும் ஆட்சி அமைப்பது குறித்து பாஜகவின் மேலிட உத்தரவுக்கு காத்திருப்பதாக எடியூரப்பா தெரிவித்தார்.  

எனினும், அதிருப்தி எம்.எல்.ஏக்கள் கடிதம் மீது சபாநாயகர் எடுக்கும் முடிவுக்காக காத்திருக்கவும் பாஜக முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், கர்நாடகாவில் தற்போதைய அரசியல் சூழலில் யாராலும் நிலையான ஆட்சி தர முடியாது என்று காபந்து முதல் மந்திரி குமாரசாமி தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்