கொல்கத்தாவில் நிலநடுக்கம் - ரிக்டர் அளவுகோலில் 3.6 ஆக பதிவு

கொல்கத்தாவில் ஏற்பட்ட நிலநடுக்கம், ரிக்டர் அளவுகோலில் 3.6 ஆக பதிவானது.

Update: 2019-08-03 19:18 GMT
கொல்கத்தா,

மேற்கு வங்காள மாநிலம் ஹவுரா மாவட்டத்தில் நேற்று மாலை 4.30 மணி அளவில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் கொல்கத்தாவிலும் உணரப்பட்டது.

இது ரிக்டர் அளவுகோலில் 3.6 புள்ளிகளாக பதிவானது. சில வினாடிகளே நீடித்த நிலநடுக் கத்தால் பாதிப்பு ஏதும் ஏற்படவில்லை.

மேலும் செய்திகள்