டெல்லியில் இன்று கூடுகிறது காங்கிரஸ் செயற்குழு - புதிய தலைவரை தேர்ந்தெடுக்க வாய்ப்பு

காங்கிரஸ் கட்சியின் தலைவர் பொறுப்பில் இருந்து ராகுல் காந்தி விலகிய நிலையில், இன்று அக்கட்சியின் செயற்குழு கூட்டம் கூடுகிறது.

Update: 2019-08-10 01:41 GMT
புதுடெல்லி,

 மக்களவை தேர்தலில் காங்கிரஸ் கட்சி படு தோல்வியை சந்தித்தது.   காங்கிரஸ் தலைவராக இருந்த ராகுல் காந்தி மக்களவை  தேர்தல் தோல்விக்கு பொறுப்பேற்று, பதவியை ராஜினாமா செய்தார்.  அவரது ராஜினாமாவை காங்கிரஸ் செயற்குழு ஏற்றுக்கொள்ளாத போதிலும் தனது முடிவில் ராகுல் காந்தி உறுதியாக உள்ளார். 

இந்த நிலையில், காங்கிரஸ் கட்சியின் செயற்குழு கூட்டம் இன்று நடைபெறுகிறது.  இந்த கூட்டத்தில்  காங்கிரஸ் கட்சியின் தலைவர் தேர்வு செய்யப்படலாம் என்று கூறப்படுகிறது.  முகுல் வாஸ்னிக்(59) தேர்வாக அதிக வாய்ப்பு உள்ளதாக கட்சி வட்டாரங்களில் பேசப்படுகிறது.  மேலும் தலைமை பொறுப்பில் சிறப்பாக வழிநடுத்திய ராகுல் காந்திக்கு செயற்குழு கூட்டத்தில் நன்றி தெரிவிக்கப்படும் எனவும் எதிர்பாரக்கப்படுகிறது.  

மேலும் செய்திகள்