மாநிலங்களவை எம்.பி பதவிக்கு போட்டி -மன்மோகன் சிங் வேட்புமனு தாக்கல்
மாநிலங்களவை எம்.பி பதவிக்கு போட்டியிட மன்மோகன்சிங் வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.
ஜெய்பூர்,
காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் பிரதமருமான 86 வயதான மன்மோகன் சிங், கடந்த, 18 ஆண்டுகளாக அசாம் மாநிலத்திலிருந்து மாநிலங்களவைக்கு தேர்வு செய்யப்பட்டு, எம்.பி.,யாக பதவி வகித்தார். சமீபத்தில் அவரது பதவிக் காலம் முடிவடைந்தது.
இதையடுத்து, மீண்டும் அவரை எம்.பி.,யாக தேர்வு செய்ய காங்கிரஸ் மேலிடம் முடிவு செய்தது. இந்நிலையில், ராஜஸ்தான் மாநிலத்திலிருந்து அவரை எம்.பியாக தேர்வு செய்ய முடிவு செய்யப்பட்டது. இதன்படி, ஜெய்பூரில் மன்மோகன் சிங் இன்று வேட்பு மனு தாக்கல் செய்தார்.
காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் பிரதமருமான 86 வயதான மன்மோகன் சிங், கடந்த, 18 ஆண்டுகளாக அசாம் மாநிலத்திலிருந்து மாநிலங்களவைக்கு தேர்வு செய்யப்பட்டு, எம்.பி.,யாக பதவி வகித்தார். சமீபத்தில் அவரது பதவிக் காலம் முடிவடைந்தது.
இதையடுத்து, மீண்டும் அவரை எம்.பி.,யாக தேர்வு செய்ய காங்கிரஸ் மேலிடம் முடிவு செய்தது. இந்நிலையில், ராஜஸ்தான் மாநிலத்திலிருந்து அவரை எம்.பியாக தேர்வு செய்ய முடிவு செய்யப்பட்டது. இதன்படி, ஜெய்பூரில் மன்மோகன் சிங் இன்று வேட்பு மனு தாக்கல் செய்தார்.