முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரத்திற்கு அமலாக்கத்துறை சம்மன்

முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் 23-ம் தேதி டெல்லியில் உள்ள அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜராக அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது.

Update: 2019-08-19 10:18 GMT
புதுடெல்லி,

மன்மோகன் சிங் பிரதமராக இருந்தபோது இந்தியன் ஏர்லைன்ஸ், ஏர் இந்தியா நிறுவனங்களுக்காக ஏர் பஸ் விமானங்கள் வாங்கப்பட்டன.  ஏர் இந்தியா விமான நிறுவனத்திற்காக ஏர் பஸ் விமானங்களை வாங்கியதில் ஊழல் நடைபெற்றதாக தொடரப்பட்ட வழக்கில் முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரத்திற்கு  அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது.

மேலும் செய்திகள்