“மோடி அரசு, தொடர்ந்து 25 ஆண்டுகள் ஆளும்”: கோவா முதல்-மந்திரி சொல்கிறார்

மோடி அரசு, தொடர்ந்து 25 ஆண்டுகள் ஆளும் என கோவா முதல்-மந்திரி கூறினார்.

Update: 2019-08-20 19:29 GMT
பனாஜி,

கோவா மாநிலத்தில் பிரமோத் சவந்த் தலைமையிலான பா.ஜனதா அரசு நடந்து வருகிறது. தலைநகர் பனாஜியில் நடைபெற்ற பா.ஜனதா ஊழியர்கள் கூட்டத்தில் முதல்-மந்திரி பிரமோத் சவந்த் பேசியதாவது:-

இனிவரும் நாட்களில், மோடி தலைமையிலான அரசு பல்வேறு முக்கிய முடிவுகளை எடுக்கும். அதன்பிறகு இந்த அரசை யாராலும் மாற்ற முடியாது. மோடி அரசு இன்னும் 25 ஆண்டுகளுக்கு தொடர்ந்து ஆட்சியில் இருக்கும் என்று மக்கள் உணர்ந்து விட்டனர். காஷ்மீர் முதல் கன்னியாகுமரிவரை இருக்கும் மக்கள் இந்த முடிவில்தான் உள்ளனர். இவ்வாறு அவர் பேசினார்.

இந்த கூட்டத்தில் மத்தியபிரதேச முன்னாள் முதல்-மந்திரி சிவராஜ்சிங் சவுகானும் பங்கேற்றார்.

மேலும் செய்திகள்