ப.சிதம்பரம் மேல் முறையீட்டு மனு மீது உச்ச நீதிமன்றம் இன்று விசாரணை

முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தின் முன் ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டதை எதிர்த்த மேல் முறையீட்டு மனு இன்று விசாரணைக்கு வரவுள்ளது.

Update: 2019-08-23 02:14 GMT
புதுடெல்லி,

ஐ.என்.எக்ஸ் முறைகேடு வழக்கில், தனக்கு முன் ஜாமீன் கோரி ப. சிதம்பரம் தாக்கல் செய்த மனுவை டெல்லி ஐகோர்ட் அண்மையில் தள்ளுபடி செய்தது. இதையடுத்து, அந்த உத்தரவுக்கு எதிராக  ப. சிதம்பரம் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட மேல்முறையீட்டு மனு இன்று விசாரணைக்கு வருகிறது. 

நீதிபதி பானுமதி மற்றும் நீதிபதி ஏ.எஸ்போபண்ணா அமர்வு இம்மனுவை விசாரிக்க உள்ளது. டெல்லி நீதிமன்றம் அளித்த உத்தரவை உச்ச திமன்றத்திடம் சிபிஐ முறைப்படி தெரிவிக்கும். அதன்அடிப்படையில் விசாரணை நடைபெறும் எனத் தெரிகிறது. சிதம்பரம் ஏற்கெனவே கைதாகி விட்டதால் மனு தள்ளுபடியாக வாய்ப்பு என்றே கூறப்படுகிறது.

மேலும் செய்திகள்