காஷ்மீர்: கோவையை சேர்ந்த சி.ஆர்.பி.எப். அதிகாரி துப்பாக்கியால் சுட்டு தற்கொலை

காஷ்மீரில் கோயம்புத்தூர் மாவட்டத்தைச் சேர்ந்த சி.ஆர்.பி.எப். அதிகாரி தனது சொந்த துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2019-08-24 07:43 GMT
ஸ்ரீநகர்,

தமிழ்நாட்டின் கோயம்புத்தூர் மாவட்டத்தை சேர்ந்தவர் எம்.அரவிந்த் (வயது 33). காஷ்மீரில் சி.ஆர்.பி.எப்.-ல் துணை தளபதியாக பணியாற்றி வருகிறார்.  இவர் 2014 ஆம் ஆண்டு சி.ஆர்.பி.எப்.-ல் படை வீரராக பணியில் சேர்ந்தார். 

இந்நிலையில் இன்று காலை 11 மணியளவில் தனது சொந்த துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார். கடந்த 14 ஆம் தேதி விடுமுறை முடிந்து பணிக்கு திரும்பியுள்ளார். இவரது மனைவி கடந்த 20 ஆம் தேதியன்று காஷ்மீர் வந்துள்ளார். அதன் பிறகு இன்று காலை அரவிந்த் தனது சொந்த துப்பாக்கியால் சுட்டுக்கொண்டு தற்கொலை செய்துள்ளார்.

இது குறித்து போலீசார் நடத்திய விசாரணையில் அவரது குடும்ப வாழ்வில் பிரச்சினைகள் இருந்ததாக தெரிய வந்துள்ளது. அரவிந்த் தற்கொலைக்கு வேறு ஏதும் காரணங்கள் உள்ளனவா என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.  

மேலும் செய்திகள்