காஷ்மீர் சகோதரிகளை திருமணம் செய்து கொண்ட பீகார் சகோதரர்கள் கைது

காஷ்மீர் சகோதரிகளை திருமணம் செய்துகொண்ட பீகாரை சேர்ந்த இரு இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். காஷ்மீர் பெண்களை கடத்தியதாக அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Update: 2019-08-29 10:59 GMT
பாட்னா,

பீகாரின் சுபால் மாவட்டம் ராம்விஷ்ணுபூர் கிராமத்தை சேர்ந்த பர்வேஸ் ஆலம் மற்றும் தர்வேஜ் ஆலம் சகோதரர்கள் ஆவர். இவர்கள் ஜம்மு காஷ்மீரின் ரம்பான் மாவட்டத்தில் தச்சர்களாக பணிபுரிந்துள்ளனர். அங்கிருந்த போது சகோதரிகளான இரு பெண்களை காதலித்து வந்துள்ளனர். பின்னர் அந்தப் பெண்களுடன் தங்களது சொந்த ஊரான ராம்விஷ்ணுபூர் கிராமத்திற்கு வந்து விட்டனர். இங்கே சில நாட்களுக்கு முன்னர் அவர்களுக்கு திருமணம் நடந்துள்ளது. இந்நிலையில் காஷ்மீரி சகோதரிகளை திருமணம் செய்து கொண்ட சகோதரர்களை காஷ்மீர் போலீசார் கைது செய்துள்ளனர். 

இளம்பெண்களின் தந்தை காஷ்மீர் போலீசாரிடம் தனது மகள்கள் கடத்தப்பட்டதாக புகார் அளித்ததை தொடர்ந்து, பீகார் போலீசாரின் உதவியுடன் காஷ்மீர் போலீசார் இளைஞர்களை கைது செய்துள்ளனர். 

கைது செய்யப்பட்ட இளைஞர்கள், நாங்கள் இளம்பெண்களின் சம்மதத்துடன் தான் திருமணம் செய்து கொண்டோம். கட்டாயப்படுத்தவில்லை, கடத்தவுமில்லை எனக் கூறியுள்ளனர்.

மேலும் செய்திகள்