மகாராஷ்டிராவில் ரசாயன தொழிற்சாலை வெடிவிபத்தில் 12 பேர் பலி

மகாராஷ்டிராவில் ரசாயன தொழிற்சாலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 12 பேர் பலியாகி உள்ளனர்.

Update: 2019-08-31 10:05 GMT
துலே (மகாராஷ்டிரா),

மகாராஷ்டிராவின் துலே பகுதியில் அமைந்த ரசாயன தொழிற்சாலை ஒன்றில் இன்று வெடிவிபத்து ஏற்பட்டது.  இந்த தொழிற்சாலையில் 100க்கும் மேற்பட்டவர்கள் வேலை பார்த்து வந்தனர் என கூறப்படுகிறது.

வெடிவிபத்தில் தொழிற்சாலையை சுற்றிலும் கரும் புகையாக காணப்படுகிறது. தீயை அணைக்க சுற்று வட்டாரத்தில் இருந்து தீயணைக்கும் படைகள் விரைந்து சென்றுள்ளன.  இந்த வெடிவிபத்தில் 12 பேர் வரை பலியாகி உள்ளனர்.  58 பேர் காயமடைந்து உள்ளனர்.

மேலும் செய்திகள்