குஜராத்தில் ஆற்றில் மூழ்கி 10 பேர் பலி

குஜராத்தில் விநாயகர் சிலை கரைத்தபோது ஆற்றில் மூழ்கி 10 பேர் பரிதாபமாக பலியாகினர்.

Update: 2019-09-07 21:34 GMT
ஆமதாபாத்,

குஜராத் மாநிலம் கேடா மாவட்டத்தில் உள்ள ஆரவள்ளி மற்றும் கபத்வான்ஜ் பகுதியில் விநாயகர் சிலைகள் வாத்ராக், மோகர் ஆறுகளில் கரைக்கப்பட்டன. சிலைகளை கரைத்த பின்னர், பக்தர்கள் ஆற்றில் இறங்கி உற்சாகமாக குளித்தனர். அப்போது வாத்ராக் ஆற்றில் மூழ்கி 6 வாலிபர்களும், மோகர் ஆற்றில் மூழ்கி 4 வாலிபர்களும் பரிதாபமாக உயிரிழந்தனர்.

மேலும் செய்திகள்