ஜம்மு காஷ்மீர்: லஷ்கர் இ தொய்பா இயக்க பயங்கரவாதி சுட்டுக்கொலை

ஜம்மு காஷ்மீரில் லஷ்கர் இ தொய்பா இயக்க பயங்கரவாதி சுட்டுக்கொலை செய்யப்பட்டார்.

Update: 2019-09-11 07:35 GMT
புதுடெல்லி,

ஜம்மு காஷ்மீரின் சோப்பூர் பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இந்த தகவலின் பேரில், அங்கு பாதுகாப்பு படையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.  அப்போது அங்கு பதுங்கியிருந்த பயங்கரவாதிகள், பாதுகாப்பு படையினரை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். 

உடனே சுதாரித்துக்கொண்ட பாதுகாப்பு படையினர் பதில் தாக்குதல் நடத்தினர். இரு தரப்பினருக்கு இடையே நடைபெற்ற சண்டையில் பயங்கரவாதி சுட்டுக்கொல்லப்பட்டான்.  போலீஸ் தரப்பில் 2 பேர்  காயமடைந்தனர்.

சுட்டுக்கொல்லப்பட்ட பயங்கரவாதி லஷ்கர் இ தொய்பா இயக்கத்தைச் சேர்ந்த முக்கிய தளபதி ஆசிப் என்பது தெரியவந்துள்ளது. சோப்பூர் பகுதியில் நேற்று நடத்தப்பட்ட சோதனையின்போது, லஷ்கர் இ தொய்பா பயங்கரவாத இயக்கத்துடன் தொடர்புடைய 8 பேர் கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்