ஐ.என்.எக்ஸ்.மீடியா வழக்கு: ப.சிதம்பரம், கார்த்தி சிதம்பரம் உள்பட 14 பேர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல்
ஐ.என்.எக்ஸ்.மீடியா வழக்கில் சிதம்பரம், கார்த்தி சிதம்பரம் உள்பட 14 பேர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
புதுடெல்லி,
ஐ.என்.எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் ப.சிதம்பரம் மற்றும் அவரது மகன் கார்த்தி சிதம்பரம், பீட்டர் முகர்ஜி உள்பட 14 பேர் மீது சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில், சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது. இந்த வழக்கை வரும் 21 ஆம் தேதி டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றம் விசாரணைக்கு எடுத்துக்கொள்கிறது.