சமூக வலைத்தளங்களை ஒழுங்கு படுத்த விதிகள்- உச்ச நீதிமன்றத்திடம் மத்திய அரசு தகவல்
சமூக வலைத்தளங்களை ஒழுங்கு படுத்த ஜனவரி 15 ஆம் தேதிக்குள் விதிகள் ஒழுங்கு படுத்தப்படும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
புதுடெல்லி,
சமூக வலைத்தளங்களில் பரப்பப்படும் வெறுப்பு உணர்வைத் தூண்டும் கருத்துகள், போலி செய்திகள், அவதுறான பதிவுகள் மற்றும் தேச விரோத செயல்பாடுகளை ஒழுங்குபடுத்தும் வகையில் புதிய விதிமுறைகள் வரும் ஜனவரி 15 ஆம் தேதிக்கு முன்னர் வகுக்கப்படும் என்று மத்திய அரசு, உச்ச நீதிமன்றத்திடம் தகவல் தெரிவித்துள்ளது.