காஷ்மீரில் லாரி-கார் மோதலில் 5 பேர் சாவு
காஷ்மீரில் லாரி-கார் மோதலில் 5 பேர் உயிரிழந்தனர்.
ஸ்ரீநகர்,
காஷ்மீரில் ஸ்ரீநகர்-ஜம்மு தேசிய நெடுஞ்சாலையில் அனந்தநாத் அருகே வான்போ என்ற இடத்தில் நேற்று சாலையில் சென்ற கார் மீது லாரி மோதியது. இந்த விபத்தில் காரில் இருந்த 5 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்களை போலீசார் மீட்டு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.ஆனால் அவர்களை பரிசோதித்த டாக்டர்கள் 5 பேரும் விபத்து நடந்த இடத்திலேயே இறந்து விட்டதாக அறிவித்தனர். இதுதொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
காஷ்மீரில் ஸ்ரீநகர்-ஜம்மு தேசிய நெடுஞ்சாலையில் அனந்தநாத் அருகே வான்போ என்ற இடத்தில் நேற்று சாலையில் சென்ற கார் மீது லாரி மோதியது. இந்த விபத்தில் காரில் இருந்த 5 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்களை போலீசார் மீட்டு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.ஆனால் அவர்களை பரிசோதித்த டாக்டர்கள் 5 பேரும் விபத்து நடந்த இடத்திலேயே இறந்து விட்டதாக அறிவித்தனர். இதுதொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.