ப.சிதம்பரத்தின் ஜாமீன் மனு: தேதி குறிப்பிடாமல் தீர்ப்பு ஒத்திவைப்பு

ஐஎன்எக்ஸ் மீடியா தொடர்பான அமலாக்கத்துறை வழக்கில் ப.சிதம்பரத்தின் ஜாமீன் மனு மீதான தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் டெல்லி உயர்நீதிமன்றம் ஒத்திவைத்தது.

Update: 2019-11-08 14:03 GMT
புதுடெல்லி,

ஐஎன்எக்ஸ் மீடியா விவகாரத்தில் முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் உள்ளார். சிபிஐ தொடர்ந்த வழக்கில் அவருக்கு ஜாமீன் வழங்கப்பட்டது. அமலாக்கத்துறை வழக்கில் ஜாமீன் கேட்டு டெல்லி உயர்நீதிமன்றத்தில் சிதம்பரம் மனு தாக்கல் செய்தார். 

இந்த மனு மீதான வழக்கில் வாதங்கள் முடிந்த நிலையில்  தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை ஒத்திவைத்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மேலும் செய்திகள்