ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கு: ப.சிதம்பரத்திற்கு ஜாமீன் கிடைக்குமா? நாளை தீர்ப்பு

ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் ப.சிதம்பரம் தாக்கல் செய்த ஜாமீன் மனு மீது டெல்லி உயர்நீதிமன்றம் நாளை தீர்ப்பு வழங்குகிறது.

Update: 2019-11-14 14:15 GMT
புதுடெல்லி,

ஐ.என்.எக்ஸ். மீடியா நிறுவனத்துக்கு வெளிநாட்டில் இருந்து ரூ.305 கோடி நிதி திரட்ட அனுமதி வழங்கியதில் முறைகேடு நடந்ததாக கூறி முன்னாள் மத்திய நிதி மந்திரி ப.சிதம்பரம், அவருடைய மகன் கார்த்தி சிதம்பரம் எம்.பி. உள்ளிட்டோர் மீது சி.பி.ஐ.யும், அமலாக்கப்பிரிவும் தனித்தனியாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றன.

இந்த வழக்கில் ப.சிதம்பரம், சி.பி.ஐ. அதிகாரிகளால் கடந்த ஆகஸ்டு 21-ந் தேதி கைது செய்யப்பட்டு டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டார். சி.பி.ஐ. தொடர்ந்த இந்த வழக்கில் அவருக்கு சுப்ரீம் கோர்ட்டு சில நிபந்தனைகளுடன் ஜாமீன் வழங்கியது.

இந்தநிலையில் அமலாக்கத்துறை வழக்கில் ப.சிதம்பரம் ஜாமீன் கோரிய நிலையில் டெல்லி உயர்நீதிமன்றம் நாளை தீர்ப்பு வழங்குகிறது.  அமலாக்கத்துறை வழக்கில் டெல்லி உயர்நீதிமன்றம் நாளை ஜாமீன் வழங்கினால் திகார் சிறையில் இருந்து ப.சிதம்பரம் வெளியே வரலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும் செய்திகள்