காஷ்மீர்: பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறல்

காஷ்மீர் மாநிலம் பூஞ்ச் மாவட்டத்தில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல் நடத்தியது.

Update: 2019-11-17 20:45 GMT
ஜம்மு,

பாகிஸ்தான் ராணுவம், காஷ்மீர் மாநிலம் பூஞ்ச் மாவட்டத்தில் எல்லை கட்டுப்பாட்டு கோட்டை ஒட்டிய புறக்காவல் நிலையங்களையும், கிராமங்களையும் குறிவைத்து நேற்று தாக்குதல் நடத்தியது. சிறு பீரங்கிகளால் அத்துமீறி தாக்குதலில் ஈடுபட்டது. அதையடுத்து, பொதுமக்கள் பதுங்கு குழிகளில் தஞ்சம் அடைந்தனர். இந்த தாக்குதலுக்கு இந்திய ராணுவம் பதிலடி கொடுத்தது.

மேலும் செய்திகள்