திகார் சிறையில் உள்ள ப.சிதம்பரத்திடம் விசாரணை நடத்த அமலாக்கத்துறைக்கு நீதிமன்றம் அனுமதி
திகார் சிறையில் உள்ள ப.சிதம்பரத்திடம் விசாரணை நடத்த அமலாக்கத்துறைக்கு 2 நாட்கள் அனுமதி அளித்து டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
புதுடெல்லி,
ஐ.என்.எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் திகார் சிறையில் நீதிமன்றக்காவலில் அடைக்கப்பட்டுள்ளார்.
ஐ.என்.எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் திகார் சிறையில் நீதிமன்றக்காவலில் அடைக்கப்பட்டுள்ளார்.
இந்த சூழலில், சிதம்பரத்திடம் சில ஆவணங்களை காட்டி விசாரிக்க வேண்டியுள்ளதால், இரண்டு நாட்கள், அவரிடம் விசாரிக்க அனுமதிக்கக் கோரி டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை முறையிட்டது.
அமலாக்கத்துறையின் முறையீட்டை ஏற்ற டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றம், ப.சிதம்பரத்தை 2 நாள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி வழங்கியுள்ளது. வரும் 22 மற்றும் 23 ஆகிய தேதிகளில், திகார் சிறையில் வைத்து ப.சிதம்பரத்திடம் அமலாக்கத்துறை விசாரணை நடத்தலாம் என்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அமலாக்கத்துறையின் முறையீட்டை ஏற்ற டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றம், ப.சிதம்பரத்தை 2 நாள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி வழங்கியுள்ளது. வரும் 22 மற்றும் 23 ஆகிய தேதிகளில், திகார் சிறையில் வைத்து ப.சிதம்பரத்திடம் அமலாக்கத்துறை விசாரணை நடத்தலாம் என்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.