மராட்டிய விவகாரத்தால் பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் அமளி -இரு அவைகளும் ஒத்திவைப்பு
மராட்டிய விவகாரத்தால் எதிர்க்கட்சிகள் பாராளுமன்றத்தில் கடும் அமளியில் ஈடுபட்டனர்.
புதுடெல்லி,
மராட்டிய அரசியல் விவகாரம் இன்று பாராளுமன்றத்தில் புயலை கிளப்பியுள்ளது. இன்று காலை அவை கூடியதும், மராட்டியத்தில் ஜனநாயக படுகொலை நடைபெற்று வருவதாக கூறி எதிர்க்கட்சி எம்.பி.க்கள் அமளியில் ஈடுபட்டனர். தொடர்ந்து உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டு கொண்டிருந்ததால், பாராளுமன்றத்தின் இரு அவைகளும் நண்பகல் 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.