காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு: 3-வது நாளாக போக்குவரத்து துண்டிப்பு

காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு காரணமாக, 3-வது நாளாக போக்குவரத்து துண்டிக்கப்பட்டது.

Update: 2019-12-14 19:15 GMT
ஸ்ரீநகர்,

காஷ்மீர் மாநிலத்தில் கடும் பனிப்பொழிவு நிலவி வருகிறது. இதனால் 3-வது நாளாக நாட்டின் பிற பகுதிகளில் இருந்து அங்கு போக்குவரத்து துண்டிக்கப்பட்டு உள்ளது. நுழைவுவாயிலான ஜவஹர் சுரங்கப்பாதையில் கடுமையாக பனி படிந்துள்ளது. அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

விமான சேவையும் 7 நாட்களாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. ஸ்ரீநகரில் வெப்பநிலை மைனஸ் 0.5 டிகிரி செல்சியஸ் ஆகவும், ஜம்முவில் 9.6 டிகிரி செல்சியஸ் ஆகவும் இருக்கிறது. இதனால் ஜம்மு-ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலையிலும் வாகன போக்குவரத்து முடங்கியது. சாலையில் படிந்துள்ள பனியை அகற்றும் பணி நடந்து வருகிறது.

மேலும் செய்திகள்