சிவசேனா நிர்வாகி சேகர் ஜாதவ் மீது மர்ம நபர் துப்பாக்கி சூடு

சிவசேனா நிர்வாகி சேகர் ஜாதவ் மீது மர்ம நபர் ஒருவர் இன்று காலை துப்பாக்கி சூடு நடத்தியுள்ளார்.

Update: 2019-12-19 05:05 GMT
விக்ரோலி,

சிவசேனாவின் நிர்வாகிகளில் ஒருவரான சேகர் ஜாதவ் இன்று காலை விக்ரோலி புறநகர் பகுதியில் தகோர் என்ற இடத்தில் சாய் மந்திர் அருகே காலை 8 மணியளவில் நடந்து சென்றுள்ளார். அப்போது அவர் மீது மர்ம நபர் ஒருவர் திடீரென்று துப்பாக்கி சூடு நடத்தியுள்ளார்.

இதில் அவரது கையில் காயம் ஏற்பட்டு உள்ளது.  இதனை அடுத்து அவர் மீட்கப்பட்டு விக்ரோலி பகுதியிலுள்ள கோத்ரெஜ் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.  துப்பாக்கி சூடு நடத்திய நபரை அந்த பகுதி மக்கள் பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர்.  இதுபற்றி விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

மேலும் செய்திகள்