கேரள மாணவர்கள் மீதான தாக்குதலை தடுக்க வேண்டும்; அமித்ஷாவுக்கு பினராயி விஜயன் கடிதம்

குடியுரிமை சட்ட எதிர்ப்பு போராட்டங்களில் கேரள மாணவர்கள் மீதான தாக்குதலை தடுக்க வேண்டும் என அமித்ஷாவுக்கு பினராயி விஜயன் கடிதம் எழுதி உள்ளார்.

Update: 2019-12-19 23:06 GMT
திருவனந்தபுரம், 

மத்திய உள்துறை மந்திரி அமித்ஷாவுக்கு கேரள மாநில முதல்-மந்திரி பினராயி விஜயன் கடிதம் எழுதி உள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக டெல்லியில் நடந்த போராட்டத்தின்போது, அங்கு படிக்கும் கேரள மாநிலத்தை சேர்ந்த மாணவர்கள் மீது சில குழுக்கள் தாக்குதல் நடத்தியதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இதனால், அந்த மாணவர்களின் குடும்பத்தினர் கவலை அடைந்துள்ளனர். அவர்களின் கவலையையும், கேரள அரசின் கவலையையும் தங்கள் கவனத்துக்கு கொண்டு வருகிறேன். ஆகவே, தாங்கள் உடனே தலையிட்டு, கேரள மாணவர்கள் மீது இத்தகைய தாக்குதல்கள் நடக்காமல் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்