காஷ்மீரில் பாகிஸ்தான் அத்துமீறி தாக்குதல்; இந்திய ராணுவம் பதிலடி

காஷ்மீரில் அத்துமீறி தாக்குதல் நடத்தி வரும் பாகிஸ்தானுக்கு இந்திய ராணுவம் பதிலடி அளித்து வருகிறது.

Update: 2019-12-21 03:16 GMT
ஜம்மு,

இந்தியா மற்றும் பாகிஸ்தான் நாடுகள் இடையே போர்நிறுத்த ஒப்பந்த விதிகள் அமலில் இருந்து வருகின்றன.  காஷ்மீர் பகுதியில் பாகிஸ்தான் சார்பில் அவ்வப்பொழுது அத்துமீறிய தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது.  இதற்கு இந்திய தரப்பில் பதிலடியும் கொடுக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், ஜம்மு மற்றும் காஷ்மீரின் தங்தார் மற்றும் கன்ஜல்வான் பிரிவுகளில் போர்நிறுத்த ஒப்பந்தங்களை மீறி பாகிஸ்தான் தரப்பில் இருந்து இன்று துப்பாக்கி சூடு நடத்தப்பட்டு வருகிறது.  இந்த தாக்குதலுக்கு இந்திய ராணுவம் பதிலடி கொடுத்து வருகிறது.

மேலும் செய்திகள்