உத்தரகாண்டில் நிலநடுக்கம்; ரிக்டரில் 4.5 ஆக பதிவு

உத்தரகாண்டில் சமோலி பகுதியில் இன்று இரவு நிலநடுக்கம் ஏற்பட்டது.

Update: 2019-12-24 15:37 GMT
சமோலி,

உத்தரகாண்டின் சமோலி பகுதியில் இன்று இரவு 7.30 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது.  இது ரிக்டரில் 4.5 ஆக பதிவாகி உள்ளது.  இதனால் பொதுமக்கள் அலறியடித்தபடி வீடுகளை விட்டு வெளியேறி தெருக்களில் தஞ்சமடைந்தனர்.

எனினும் நிலநடுக்கத்தினால் ஏற்பட்ட சேதவிவரங்கள் உடனடியாக வெளியாகவில்லை.

மேலும் செய்திகள்