டெல்லியில் உள்ள பிரதமர் மோடியின் இல்ல வளாகத்தில் தீ விபத்து

டெல்லி லோக் கல்யாண் மார்க் பகுதியில் பிரதமரின் அதிகாரப்பூர்வ இல்லம் அமைந்துள்ளது.

Update: 2019-12-30 14:36 GMT
புதுடெல்லி,

டெல்லி லோக் கல்யாண் மார்க் பகுதியில் உள்ள பிரதமர் மோடியின் அதிகாரப்பூர்வ இல்லத்தில் இன்று இரவு 7.25 மணியளவில் தீ  விபத்து ஏற்பட்டதாக செய்திகள் வெளியாகின. இந்த நிலையில்,  பிரதமர் அலுவலக டுவிட்டர் பக்கத்தில் இது குறித்து விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.  

பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள டுவிட் பதிவில், “  லோக் கல்யாண் மார்க் பகுதியில் மின் கசிவு காரணமாக லேசான தீ விபத்து ஏற்பட்டது.  பிரதமரின் அதிகாரப்பூர்வ இல்லத்திலோ, அல்லது அலுவலகத்திலோ இந்த தீ விபத்து ஏற்படவில்லை.  

சிறப்பு பாதுகாப்பு  படை (எஸ்.பி.ஜி) வரவேற்பு  பகுதியில் தான் தீ விபத்து ஏற்பட்டிருந்தது. தற்போது தீ பெருமளவு கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும் செய்திகள்