பிரதமர் மோடியுடன் நாராயணசாமி சந்திப்பு: கவர்னர் கிரண்பெடியை மாற்ற வலியுறுத்தல்

பிரதமர் மோடியை நாராயணசாமி நேரில் சந்தித்தார். அப்போது அவர் புதுச்சேரி கவர்னர் கிரண்பெடியை மாற்ற வலியுறுத்தியதாக கூறினார்.

Update: 2020-01-14 21:57 GMT
புதுடெல்லி,

புதுச்சேரி முதல்-அமைச்சர் நாராயணசாமி டெல்லியில் சோனியாகாந்தி தலைமையில் நடந்த காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டத்தில் கலந்து கொண்டார். தொடர்ந்து மத்திய மந்திரிகள் ராஜ்நாத் சிங், நிதின் கட்காரி ஆகியோரை சந்தித்து பேசிய நாராயணசாமி, நேற்று பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை மந்திரி அமித்ஷா, நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் ஆகியோரை சந்தித்து பேசினார். அப்போது பிரதமர் நரேந்திர மோடியிடம், ‘3 ஆண்டுகளாக தொடர்ச்சியாக மாநிலத்திற்கு தொல்லை கொடுத்து வருகிற கவர்னர் கிரண்பெடியை மாற்ற வேண்டும்’ என வலியுறுத்தினார்.

மேலும் செய்திகள்