மெட்ரோ ரெயில் முன் பாய்ந்து முன்னாள் ராணுவ வீரர் தற்கொலை

மெட்ரோ ரெயில் முன் பாய்ந்து முன்னாள் ராணுவ வீரர் தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2020-01-17 20:21 GMT
புதுடெல்லி,

டெல்லியில் உள்ள துவர்கா மெட்ரோ ரெயில் நிலையத்தில் இருந்து நேற்று முன்தினம் காலை 10 மணி அளவில் நொய்டாவை நோக்கி ரெயில் ஒன்று புறப்பட்டு சென்றது.

அப்போது 70 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் திடீரென அந்த ரெயில் முன்பு குதித்தார். அதில் தூக்கிவீசப்பட்ட அவரை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். இருப்பினும் சிகிச்சை பலன் அளிக்காமல் அவர் பரிதாபமாக உயிர் இழந்தார்.

விசாரணையில், அவர் காக்ரோலா பகுதியை சேர்ந்த ஓய்வுபெற்ற ராணுவ வீரர் பரசுராம் பாண்டே (வயது 70) என்பது தெரியவந்தது. அவருக்கு 3 மகன்கள் உள்ளனர். 3 பேருக்கும் திருமணம் ஆகிவிட்டது.

வயது முதிர்வு காரணமாக அவதி அடைந்து வந்த பரசுராம் பாண்டே தற்கொலை முடிவை தேடிக்கொண்டதாக போலீசார் தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்