ஒடிசாவில் 4 வயது சிறுமி கற்பழிப்பு; தொழில் பாதுகாப்பு படை வீரர் கைது

ஒடிசாவில் 4 வயது சிறுமி கற்பழிப்பு சம்பவத்தில், தமிழகத்தைச் சேர்ந்த தொழில் பாதுகாப்பு படை வீரர் கைது செய்யப்பட்டார்.

Update: 2020-01-18 21:15 GMT
பாரதீப்,

ஒடிசா மாநிலம் ஜகத்சிங்பூர் மாவட்டம் பாரதீப் என்ற இடத்தில் இந்தியன் ஆயில் நிறுவனத்திற்கு சொந்தமான சுத்திகரிப்பு நிலையம் உள்ளது. இங்கு பாதுகாப்பு பணியில் தமிழகத்தை சேர்ந்தவர் மத்திய தொழில் பாதுகாப்பு படை தலைமைக்காவலராக பணியாற்றி வருகிறார்.

இந்த நிலையில் தன்னுடன் பணியாற்றி வரும் சக வீரரின் 4 வயது மகளை சாக்லெட் தருவதாகக்கூறி அவர் தனது குடியிருப்புக்கு நேற்று முன்தினம் அழைத்து சென்றார். பின்னர் அந்த சிறுமியை கற்பழித்ததாக தெரிகிறது. இதுகுறித்து பாதிக்கப்பட்ட சிறுமியின் தந்தை போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து நேற்று தமிழக வீரரை கைது செய்தனர். சிறுமிக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்படுகிறது.

மேலும் செய்திகள்