குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் மாணவர் அமைப்பு வழக்கு

குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் மாணவர் அமைப்பு வழக்கு தொடர்ந்துள்ளது.

Update: 2020-01-19 22:45 GMT
புதுடெல்லி,

மத்திய அரசின் குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக பல்வேறு தரப்பினர் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்து உள்ளனர். இதில் சில மனுக்கள் வருகிற 22-ந் தேதி விசாரணைக்கு வருகின்றன. இந்த நிலையில் இந்திய மாணவர் கூட்டமைப்பு (எஸ்.எப்.ஐ.) சார்பிலும் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டு உள்ளது. அந்த மனுவில், குடியுரிமை திருத்த சட்டமானது இயற்கையிலேயே பாகுபாடு நிறைந்தது என கூறியுள்ள அந்த அமைப்பினர், இது இந்திய அரசியல் சாசனத்தின் முக்கியமான கொள்கைகளுக்கு அழிவுகரமானது என குற்றம் சாட்டியுள்ளனர்.

குறிப்பிட்ட சில மத பிரிவினர்களை வெளிப்படையாக ஆதரிக்கும் இந்த சட்டம், மற்ற மதத்தினரை நிராகரிக்கிறது எனவும், எனவே இந்த சட்டத்தை அரசியல் சாசனத்துக்கு விரோதமானது என அறிவிக்க வேண்டும் எனவும் அவர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

மதத்தின் அடிப்படையில் இயற்றப்பட்டுள்ள இந்த சட்டம் அரசியல் சாசனத்தின் 14-வது பிரிவுக்கு முரணானது என்றும் அவர்கள் குறிப்பிட்டு உள்ளனர். இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வரும் என தெரிகிறது.

மேலும் செய்திகள்