மது அருந்தும் போட்டியில் வெற்றி பெற்றவர் ரத்த வாந்தி எடுத்து சாவு

மது அருந்தும் போட்டியில் வெற்றி பெற்றவர் ரத்த வாந்தி எடுத்து உயிரிழந்தார்.

Update: 2020-01-21 20:18 GMT
பரேலி,

உத்தரபிரதேச மாநிலம் உகான்பூர் கிராமத்தை சேர்ந்தவர் ராஜேந்திர சிங். இவர் தனது உறவினர் பிரதீப் என்பவரது வீட்டுக்கு சென்றார். அங்கு மது குடிப்பது தொடர்பாக இருவருக்கும் இடையே போட்டி நடந்தது. 20 நிமிடத்துக்குள் யார் 4 ‘குவார்ட்டர்’ பாட்டில்களை குடிக்கிறாரோ அவர்தான் வெற்றியாளர். தோல்வி அடைபவர், 2 பேருக்கான 8 குவார்ட்டர் பாட்டில்களுக்கான பணத்தை கொடுக்க வேண்டும் என ஒப்பந்தம் செய்தனர். போட்டி ஆரம்பித்த 10 நிமிடத்திலேயே ராஜேந்திர சிங் 4 குவார்ட்டர் பாட்டில்களையும், தண்ணீர் உள்ளிட்ட எந்த பானமும் கலக்காமல் குடித்து முடித்து போட்டியில் வெற்றி பெற்றார்.

இந்த உற்சாகத்துடன் அவர் தனது வீட்டுக்கு வந்து படுத்தார். ஆனால், ஒரு மணி நேரத்தில் ரத்த வாந்தி எடுத்து மயங்கி விழுந்த ராஜேந்திரசிங் துடி, துடித்து இறந்தார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்