இன்ஸ்பெக்டர் தேர்வு வினாத்தாள் கசிந்த விவகாரம்: சிபிஐ விசாரணை கோரி போராட்டம் ; போலீசார் தடியடி

பீகாரில் இன்ஸ்பெக்டர் தேர்வில் வினாத்தாள் முன்கூட்டியே கசிந்த விவகாரத்தில், சிபிஐ விசாரணை கோரி போராட்டம் நடத்தியவர்களை தடியடி நடத்தி போலீசார் விரட்டியடித்தனர்.

Update: 2020-02-04 12:37 GMT
பாட்னா

பீகாரில் சமீபத்தில்  போலீஸ் இன்ஸ்பெக்டர் பணியிடங்களுக்கு ஆட்களை தேர்வு செய்ய  தேர்வு நடைபெற்றது. இந்த தேர்வின்போது, வினாத்தாள் முன்கூட்டியே கசிந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இதுகுறித்து சிபிஐ விசாரணை நடத்தக்கோரி பாட்னாவில் போராட்டம் நடைபெற்றது.

போராட்டத்தில் ஈடுபட்டவர்களை தடியடி நடத்தியும், தண்ணீரை பீய்ச்சியடித்தும் போலீசார் விரட்டியடித்தனர்.

மேலும் செய்திகள்