பெண்கள் கல்லூரி நிகழ்ச்சியில் மாணவிகளை மானபங்கப்படுத்திய 10 சமூக விரோதிகள் கைது

பெண்கள் கல்லூரி நிகழ்ச்சியில் ஊடுருவி மாணவிகளை தகாத முறையில் மானபங்கப்படுத்திய 10 சமூக விரோதிகள் கைது செய்யப்பட்டு உள்ளனர்.

Update: 2020-02-13 07:16 GMT
புதுடெல்லி

தெற்கு டெல்லியில் கடந்த 6 ஆம் தேதி நடந்த  பெண்கள் கல்லூரி  நிகழ்ச்சி ஒன்றில்  புகுந்த கும்பல் ஒன்று மாணவிகளிடம் அத்துமீறியது. இதையடுத்து குற்றவாளிகளை கைது செய்ய வலியுறுத்தி மாணவிகள் போராட்டம் நடத்தினர்.

இதைத் தொடர்ந்து 11 தனிப்படைகள் அமைக்கப்பட்டு கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகள் மூலம் குற்றவாளிகளை அடையாளம் காண போலீசார் நடவடிக்கை மேற்கொண்டனர்.

இந்நிலையில் 18 முதல் 25 வயதுக்குட்பட்ட 10 இளைஞர்களை இவ்வழக்கு தொடர்பாக போலீசார் கைது செய்துள்ளனர். மேலும் பலரிடமும் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

மேலும் செய்திகள்