கார்த்தி சிதம்பரம் வெளிநாடு செல்ல சிபிஐ சிறப்பு நீதிமன்றம் அனுமதி

கார்த்தி சிதம்பரம் வெளிநாடு செல்ல சிபிஐ சிறப்பு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

Update: 2020-02-18 13:27 GMT
புதுடெல்லி,

ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில், முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம் மற்றும் அவரது மகனும் சிவகங்கை தொகுதி எம்.பியுமான கார்த்தி சிதம்பரம் ஆகியோர் மீது அமலாக்கத் துறை மற்றும் சி.பி.ஐ. குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது. 

இந்த நிலையில் சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் கார்த்திக் சிதம்பரம் தாக்கல் செய்த மனுவில் டென்னிஸ் போட்டிக்காக லண்டன் மற்றும் பிரான்ஸ் செல்ல இரண்டு வாரம் அனுமதி கோரி இருந்தார். இந்த மனு விசாரணைக்கு வந்த நிலையில்,  இது தொடர்பாக  கார்த்தி சிதம்பரம் லண்டன் மற்றும் பிரான்ஸ் செல்ல அனுமதி வழங்கி  சிபிஐ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும்  அவரது பயணத்தின் விவரங்களின் நகலை சிபிஐயிடம் வழங்க வேண்டும் என  சிபிஐ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது.

மேலும் செய்திகள்