பிரதமரின் ஆலோசகர்களாக ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் 2 பேர் நியமனம்

பிரதமரின் ஆலோசகர்களாக ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் 2 பேர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

Update: 2020-02-21 23:00 GMT
புதுடெல்லி,

பிரதமர் மோடியின் ஆலோசகர்களாக ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் பாஸ்கர் குப்ளே, அமர்ஜீத் சின்கா ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். மத்திய மந்திரிசபையின் நியமன குழு, இதற்கு ஒப்புதல் அளித்தது. இவர்களுக்கு செயலாளர் அந்தஸ்து அளிக்கப்பட்டுள்ளது.

2 ஆண்டு காலத்துக்கோ அல்லது மறுஉத்தரவு வரும் வரையிலோ ஒப்பந்த அடிப்படையில் அவர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். முன்னாள் ஊழியர்கள் நியமனம் தொடர்பான மற்ற பணி வரன்முறைகளும் இவர்களுக்கு பொருந்தும் என்று கூறப்பட்டுள்ளது.

இவர்களில், பாஸ்கர் குப்ளே, 1983-ம் ஆண்டின் மேற்கு வங்காள பிரிவை சேர்ந்தவர். சின்கா, பீகார் பிரிவை சேர்ந்தவர் ஆவார்.

மேலும் செய்திகள்