19-ந் தேதி முதல் 31-ந் தேதி வரை கொரோனா பீதியால் படப்பிடிப்புகள் நிறுத்தம்

கொரோனா பீதியால் வருகிறா 19-ந் தேதி முதல் 31-ந் தேதி வரை படப்பிடிப்புகள் நிறுத்தப்பட்டுள்ளது.

Update: 2020-03-15 19:38 GMT
மும்பை,

இந்திய திரைப்பட மற்றும் தொலைக்காட்சி இயக்குனர்கள் சங்க தலைவர் அசோக் பண்டித் நேற்று மும்பையில் நிருபர்களிடம் கூறியதாவது:-

கொரோனா வைரசை சமாளிப்பது குறித்து திரைப்பட மற்றும் பொழுதுபோக்கு துறையின் முக்கிய அமைப்புகள் கூடி ஆலோசனை நடத்தினோம். நீண்ட விவாதத்திற்கு பிறகு வருகிற 19-ந் தேதி முதல் 31-ந் தேதி வரை அனைத்து படப்பிடிப்புகளையும் நிறுத்தும் முடிவுக்கு வந்துள்ளோம்.

வெளிநாடுகள் மற்றும் வெளிமாநிலங்களில் படப்பிடிப்பில் உள்ளவர்கள் நாடு திரும்புவதற்காகவே 19-ந் தேதி வரை அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது. தொழிலாளர்கள் ஆரோக்கியத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து சங்கங்கள் கூட்டாக இந்த முடிவை எடுத்துள்ளன.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்