350 தொகுதிகளில் வெற்றி என்று என் கைரேகை சொல்கிறது - அகிலேஷ் யாதவ்

350 தொகுதிகளில் வெற்றி என்று தனது கைரேகை சொல்வதாக, சமாஜ்வாடி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் தெரிவித்துள்ளார்.

Update: 2020-03-15 20:30 GMT
லக்னோ,

சமாஜ்வாடி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:- நான் டெல்லிக்கு விமானத்தில் சென்று கொண்டிருந்தபோது, கைரேகை பார்க்கத் தெரிந்த ஒருவர், என் உள்ளங்கையை பார்த்தார். “2022-ம் ஆண்டு உத்தரபிரதேச சட்டசபை தேர்தலில், நீங்கள் கடுமையாக உழைத்தால், 350 தொகுதிகளை கைப்பற்றி ஆட்சி அமைப்பீர்கள்” என்று அவர் கூறினார். ஆனால், கூடுதலாக ஒரு இடத்தில் ஜெயிப்பது என்று நான் முடிவு செய்துள்ளேன். எனவே, 351 தொகுதிகளில் வெற்றி பெறுவோம். சமாஜ்வாடி கட்சி ஆட்சி அமைந்த பிறகு, சாதிவாரி கணக்கெடுப்பு நடத்துவோம்” என்று அவர் கூறினார்.

மேலும் செய்திகள்