மராட்டியத்தில் மேலும் 5 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு

மராட்டியத்தில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 112 ஆக உயர்ந்துள்ளது.

Update: 2020-03-25 06:10 GMT
மும்பை,

மராட்டியத்தில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி மக்களை பயமுறுத்தி வருகிறது. எனவே கொரோனாவை தடுக்க மாநில அரசு தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. மாநிலம் முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு, மக்கள் வீடுகளில் முடக்கப்பட்டு உள்ளனர்.

நேற்று முன்தினம் வரை கொரோனாவுக்கு மராட்டியத்தில் 97 பேர் பாதிக்கப்பட்டு இருந்தனர். நேற்று ஒரே நாளில் 10 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது மருத்துவ பரிசோதனையில் உறுதிப்படுத்தப்பட்டது. இவர்கள் மும்பையில் 6 பேர், புனேயில் 2 பேர், அகமத்நகர், சத்தாராவை சேர்ந்த தலா ஒருவர் ஆவர். இதன் மூலம் மராட்டியத்தில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 107 ஆக உயர்ந்து.

இந்த நிலையில், இன்று மேலும் 5 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் மராட்டியத்தில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 112 ஆக உயர்ந்துள்ளது. 

மேலும் செய்திகள்