கொரோனா பாதிப்பு: கேரளாவில் முதல் உயிரிழப்பு

கொரோனா வைரஸ் பாதிப்பால் கேரளாவில் முதல் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது.

Update: 2020-03-28 07:04 GMT
File Photo
கொச்சி,

சீனாவின் ஹூபெய் மாகாணம் உகான் நகரில் வெளிப்பட்ட கொரோனா வைரஸ் தற்போது உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. இந்தியாவிலும் கொரோனா வைரசின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. 

இந்த நிலையில், கொரோனா பாதிப்பால் கேரளாவில் ஒருவர் பலியாகியிருப்பதாக அம்மாநில அரசு அறிவித்துள்ளது. கொச்சி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நபர் பலியாகியிருப்பதாக கேரள அரசு அறிவித்துள்ளது. கேரளாவில் கொரோனா வைரஸ் பாதிப்பால் ஏற்படும் முதல் உயிரிழப்பு இதுதான் ஆகும். 

உயிரிழந்த நபருக்கு 69-வயது எனவும் அவர்  துபாயில் இருந்து கொச்சி திரும்பியதாகவும் கேரள அரசு  தெரிவிக்கப்பட்டுள்ளது.  கேரளாவில் இதுவரை  8 வெளிநாட்டினர் உள்பட 165 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்