இந்தியாவில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 1071 ஆக உயர்வு

இந்தியாவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,071 ஆக உயர்ந்துள்ளது.

Update: 2020-03-30 05:22 GMT
புதுடெல்லி,

உலக நாடுகளை உலுக்கி வரும் கொரோனா வைரஸ் இந்தியாவிலும் கடும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை மத்திய மாநில அரசுகள் மேற்கொண்டுள்ளன. இந்தியாவில் நேற்று வரை கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1024 ஆக இருந்தது. 

இந்த நிலையில், இன்று காலை சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள தகவலின் படி கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 1,074 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 29 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டவர்களின் எண்ணிக்கையும் 99- ஆக உயர்ந்துள்ளது. 

மேலும் செய்திகள்