மராட்டியத்தில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 537 ஆக உயர்வு

மராட்டியத்தில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 537 ஆக உயர்ந்துள்ளது.

Update: 2020-04-04 06:49 GMT
மும்பை,

நாட்டிலேயே மராட்டியம் தான் கொரோனாவின் கோரப்பிடியில் அதிகம் பேர் சிக்கிய மாநிலமாக உள்ளது. நாட்டின் நிதி தலைநகரும், மராட்டிய தலைநகருமான மும்பையிலும் கொரோனா பாதிப்பு வேகமாக பரவி வருகிறது. ஆசியாவில் மிகப்பெரிய குடிசைப்பகுதியாக கருதப்படும் தாராவியில் கொரோனா தொற்று நுழைந்து இருப்பது பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. 

 நேற்று மராட்டியம் முழுவதும் மேலும் 67 பேருக்கு கொரோனா உறுதியானது. இதனால் மாநிலத்தில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 490 ஆக உயர்ந்தது. இந்த நிலையில்,  மராட்டியத்தில்  மேலும் 47 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் கொரோனா பாதித்தவர்களின்  எண்ணிக்கை 537 ஆக உயர்ந்துள்ளது.   

மேலும் செய்திகள்