டெல்லியில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 14,465 ஆக உயர்வு

டெல்லியில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 14,465- ஆக உயர்ந்துள்ளது.

Update: 2020-05-26 08:57 GMT
புதுடெல்லி,

தலைநகர்  டெல்லியில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே செல்கிறது.  இன்று ஒரு நாளில் மட்டும் டெல்லியில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 412 ஆக உள்ளது. இதன் மூலம், இதுவரை கொரோனா உறுதி செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 14,165 ஆக உயர்ந்துள்ளது.  கொரோனா பாதிப்பால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 288- ஆக உயர்ந்துள்ளது.  

முன்னதாக, நேற்று செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்த டெல்லி முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால்,“பொது முடக்க தளர்வுகளுக்குப் பின்னர், கொரோனா தொற்று பாதிப்பு சற்று அதிகரித்து உள்ளது. ஆனாலும் மக்கள் அச்சம் கொள்ள தேவையில்லை. கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்தாலும் டெல்லியில் நிலைமை கட்டுக்குள் உள்ளது. இறப்பு விகிதம் அதிகரிக்கவில்லை. கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த அரசு தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகிறது” என்றார். 

மேலும் செய்திகள்