மராட்டியத்தில் மேலும் 3,721 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

மராட்டியத்தில் மேலும் 3,721 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

Update: 2020-06-22 17:19 GMT
மும்பை,

மராட்டியத்தில் ஆட்கொல்லி கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. 

நேற்று முன்தினம் இதுவரை இல்லாத அளவில் 3 ஆயிரத்து 874 பேருக்கு தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. இதனால் மாநிலத்தில் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 1 லட்த்து 32 ஆயிரத்து 75 ஆக உயர்ந்து உள்ளது.

இந்நிலையில், இன்று மேலும் 3,721 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதனால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 1 லட்த்து 35 ஆயிரத்து 796 ஆக உயர்ந்து உள்ளது. மேலும் 62 பேர் உயிரிழந்துள்ளனர் இதன்மூலம் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 6,283 ஆக உயர்ந்துள்ளது. 

மேலும் 1,962 குணமடைந்துள்ளனர். இதன்மூலம் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 67,706 ஆக உயர்ந்துள்ளது. 

மேலும் செய்திகள்