மராட்டியத்தில் லேசான நிலநடுக்கம்; ரிக்டரில் 3.3 ஆக பதிவு

மராட்டியத்தில் ரிக்டரில் 3.3 அளவில் லேசான நிலநடுக்கம் இன்று ஏற்பட்டு உள்ளது.

Update: 2020-06-23 14:29 GMT
புனே,

மராட்டியத்தில் அகோலா நகரில் இருந்து தெற்கே 129 கி.மீ. தொலைவில் இன்று மாலை 5.28 மணியளவில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது.

இது ரிக்டரில் 3.3 அளவில் பதிவாகி உள்ளது.என்று தேசிய நிலநடுக்கவியல் மையம் தெரிவித்து உள்ளது.  நிலநடுக்கத்திற்கு பின் ஏற்பட்ட பாதிப்புகள் பற்றிய தகவல்கள் எதுவும் உடனடியாக வெளிவரவில்லை.

மிசோரம் மற்றும் ஒடிசாவில் நேற்று மித அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது.  இதனால் மிசோரமில் கட்டிடங்கள் மற்றும் சாலைகளில் விரிசல்கள் ஏற்பட்டன.  கடந்த 18ந்தேதி மற்றும் கடந்த ஞாயிறு அன்றும் மிசோரமில் நிலநடுக்கங்கள் உணரப்பட்டன.

இதேபோன்று, சத்தீஷ்காரில் நேற்று இரவு 7.46 மணியளவில் லேசான நிலநடுக்கம் உணரப்பட்டது.  இது ரிக்டரில் 3.6 ஆக பதிவாகி இருந்தது.

மேலும் செய்திகள்