ஜம்மு -காஷ்மீரில் பயங்கரவாதிகள் தாக்குதல் பாதுகாப்புபடை வீரர் காயம்- குழந்தை பலி
ஜம்மு -காஷ்மீரில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் பாதுகாப்புபடை வீரர் காயம்- ஒரு குழந்தை பலியாகி உள்ளது.
ஸ்ரீநகர் :
ஜம்மு - காஷ்மீர் மாநிலம் அனந்தநாக் மாவட்டத்தில் மத்திய பாதுகாப்பு படை வீரர்கள் மீது பயங்கரவாதிகள் திடீர் தாக்குதல் நடத்தினர், பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் பாதுகாப்பு வீரர் காயம் அடைந்தார். மற்றும் ஒரு குழந்தை உயிரிழந்ததாக கூறப்படுகிறது.
தெற்கு காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் உள்ள டிரால் என்ற செவா உல்லர் கிராமத்தில் நேற்று மாலை ஏற்பட்ட மோதலில் பயங்கரவாதி ஒருவர் பாதுகாப்பு படையினரால் கொல்லப்பட்டார்.