கொரோனாவிடம் பிரதமர் மோடி சரணடைந்து விட்டார் ராகுல்காந்தி குற்றச்சாட்டு

கொரோனாவை எதிர்த்துப் போராட மறுத்து பிரதமர் மோடி சரணடைந்துள்ளதாக ராகுல்காந்தி குற்றஞ்சாட்டி உள்ளார்.

Update: 2020-06-27 08:07 GMT
புதுடெல்லி

கொரோனாவைக் கட்டுப்படுத்த அரசிடம் திட்டம் ஏதும் இல்லாததால் பிரதமர் மோடி அமைதியாக இருப்பதாக ராகுல்காந்தி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி தனது டுவிட்டரில் கூரி இருப்பதாவது; 

நாட்டில் புதிதாகப் பல்வேறு பகுதிகளில் கொரோனா பரவியுள்ளதாகவும், அதைக் கட்டுப்படுத்த அரசிடம் திட்டம் ஏதும் இல்லை எனக் குறிப்பிட்டும் ஊடகங்களில் வந்துள்ள செய்திகளைத் தனது டுவிட்டர் பக்கத்தில் ராகுல்காந்தி இணைத்துள்ளார்.

பிரதமர் அமைதியாக உள்ளார் என்றும், கொரோனாவை எதிர்த்துப் போராட மறுத்து அவர் சரணடைந்துள்ளதாகவும் ராகுல்காந்தி குறிப்பிட்டுள்ளார்.

மேலும் செய்திகள்