மும்பையில் கொரோனா பாதிப்புக்கு உயிரிழப்பு எண்ணிக்கை 4,282 ஆக உயர்வு

மும்பையில் கொரோனா பாதிப்புக்கு 41 பேர் இன்று உயிரிழந்து உள்ளனர்.

Update: 2020-06-27 16:16 GMT
மும்பை,

நாட்டில் கொரோனா பாதிப்பு அதிகரித்து கொண்டே செல்கிறது.  இதனை தடுக்க மத்திய மற்றும் மாநில அரசுகளும் தீவிர முயற்சி மேற்கொண்டு வருகின்றன.  கொரோனா பாதிப்பு எண்ணிக்கையில், மராட்டியம் முதல் இடத்திலும், டெல்லி அடுத்த இடத்திலும் உள்ளன.  3வது இடத்தில் தமிழகம் உள்ளது.

மராட்டியத்தில் மும்பை பெருநகரம் அதிக பாதிப்புகளை சந்தித்து வருகிறது.  இதுபற்றி மும்பை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்தியில், மராட்டியத்தின் மும்பை நகரில் கொரோனா பாதிப்புக்கு இன்று ஒரே நாளில் 41 பேர் உயிரிழந்து உள்ளனர்.  இதனால் உயிரிழப்பு எண்ணிக்கை 4,282 ஆக உயர்ந்து உள்ளது.

இதேபோன்று, 1,460 பேருக்கு கொரோனா பாதிப்பு இன்று உறுதியானது.  இதனால், பாதிப்பு எண்ணிக்கை 73,747 ஆக உயர்ந்து உள்ளது.  இதுவரை 27,134 பேர் மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மேலும் செய்திகள்