தாராவியில் மேலும் 14 பேருக்கு கொரோனா தொற்று
மும்பை தாராவி குடிசைப்பகுதியில் கொரோனா இன்று 14 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
தாராவி,
ஆசியாவின் மிகப் பெரிய குடிசைப் பகுதியான மும்பை தாராவிப் பகுதியில் இன்று புதிதாக 14 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. அங்கு மொத்தம் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 2,232 ஆக உயர்ந்துள்ளது.
அதேபோல், நாட்டின் நிதி தலைநகரம் என்று அழைக்கப்படும் மும்பையிலும் 1460 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மும்பையில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 73,747 ஆக உயர்ந்துள்ளது.
மும்பையில் இன்று ஒருநாளில் மட்டும் 41 பேர் கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளனர். மும்பையில் இதுவரை கொரோனாவுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 4,282 ஆக உள்ளது.