உத்தர பிரதேச தொழிற்சாலையில் வெடிவிபத்து; 7 பேர் பலி

உத்தர பிரதேச தொழிற்சாலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் சிக்கி 7 பேர் பலியாகி உள்ளனர்.

Update: 2020-07-05 12:28 GMT
லக்னோ,

உத்தர பிரதேசத்தில் மோதி நகரில் தொழிற்சாலை ஒன்றில் இன்று திடீரென வெடிவிபத்து ஏற்பட்டது.  இந்த சம்பவத்தில் சிக்கி 7 பேர் பலியாகி உள்ளனர்.  4 பேர் காயமடைந்து உள்ளனர்.

இதுபற்றிய தகவல் அறிந்து போலீசார் மீட்பு பணியில் ஈடுபட்டு காயமடைந்தவர்களை சிகிச்சைக்கு கொண்டு சென்றனர்.  இந்த சம்பவத்திற்கான காரணம் உடனடியாக தெரியவரவில்லை.  தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்